Friday, June 10, 2016

கவிதை- நட்சத்திரங்கள் விழும் பகல்பொழுது




நட்சத்திரங்கள் விழும் பகல்பொழுது




பச்சையிலிருந்து சிவப்புக்கு
மாறுகிறது - பதிமூன்றாவது சுற்றில்
வென்றுவர அறுபது வினாடிகள்
அவருக்கு ஒதுக்கப்படுகிறது.
துழாவி நகர்ந்து எரிச்சல் முகங்களின்
இடையே
அந்த பார்வையற்றவர் வான் நோக்கி
குழிந்திருந்த துண்டை ஏந்தியபடி
வறண்ட சாரீரத்தில்
காணா இன்பம் கனிந்ததேனோ...”
பாடுகிறார்வரிகளினிடையே  நட்சத்திரங்கள்
குட்டிக்கரணம் அடித்து விழுகையில்
கூப்பிய கரங்களுடன் ஹாரன்களுக்கு வழிவிட்டு
மரத்தடிக்கு நகர்கிறார் - கடவுள்
கிளைகளை அசைக்க பழுப்பு இலைகளும்
பூக்களும் உதிர்கின்றன அந்த நட்சத்திரங்களின் மீது.
பதினான்காவது சுற்றுக்குள் நுழையும் முன் - வினாடிகள்
அறுபதிலிருந்து தொண்ணூறுக்கு மாறியிருக்கிறது.
கடவுளால் செய்யக்கூடியதெல்லாம்
அவ்வளவுதான்

நன்றி : விகடன் தடம் இதழ் -1